மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, அரசால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்க, வங்கிக்கணக்கு துவங்கிய விபரங்கள் தெளிவாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், உயர்கல்விக்கு உதவும் வகையிலும், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 உள்ளிட்ட மூன்றாண்டுகளுக்கும் சேர்த்து, 6000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறது. முறைகேடுகளை தவிர்க்கும வகையில், இத்தொகை, மாணவர்களின் வங்கிக்கணக்கில் அரசால், நேரடியாக போடப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கு முறையாக துவங்கி, அதன் விபரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விபரங்களை சேகரிக்கவும், சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும் தலைமையாசிரியர்களுக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில், தேர்ச்சி விகிதம், நலத்திட்ட பொருட்கள் வினியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின் படி, குறிப்பிட்ட ஆண்டுகள் தவிர்த்து அதற்கு முன்னாள் படித்த மாணவர்களுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்க முதன்மை கல்வி அதிகாரியின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது
No comments:
Post a Comment