பள்ளியில் 16-ஆவது புத்தகக் கண்காட்சி துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 23, 2014

பள்ளியில் 16-ஆவது புத்தகக் கண்காட்சி துவக்கம்

காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளியில், 16-ஆவது புத்தகக் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி. பள்ளி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
16-ஆவது ஆண்டாக புத்தகக் கண்காட்சி, கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கியது. பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சி வரும் டிசம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் கிழக்குப் பதிப்பகம், நியூ செஞ்சுரி, வாலி பதிப்பகம், உமா பதிப்பகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் தங்களது பதிப்பகப் புத்தகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், நீதிக் கதைகள், அகராதிகள், இலக்கிய நூல்கள், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட நாவல்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment