அரசு அலுவலர்கள் சரியான நேரத்தில் பணிகளை முடித்தால் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவில் சென்றடையும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 26, 2014

அரசு அலுவலர்கள் சரியான நேரத்தில் பணிகளை முடித்தால் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவில் சென்றடையும்


அரசு அலுவலர்கள் சரி யான நேரத்தில் பணி களை முடித்தால் அரசின் திட்டங்கள் பொது மக்க ளுக்கு விரைவில் சென் றடையும் என்று  கலெக்டர் ஜெயந்தி பேசினார்.

பயிற்சி
கரூர் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் மூலம் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கான நேர மேலாண்மை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை  கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரசின் திட்டங்கள்
அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சரியான நேரத்தில் தங்கள் பணிகளை முடித்தால் அரசின் திட்டங் கள் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடையும். அதற்காக அன்றாடம் தினசரி வாழ்வில் நமது சுய வேலைகள், அலுவலக பணி, தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகள், அலுவலகம் வரும் நேரம், போன்றவைகள் தொடர்பாக நேரத்தை வீணாக்காமல் பணிகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
            இதை அனைவரும் தெரிந்து கொண்டு சுய வாழ்விலும் அரசு பணி காலத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர்
கூறினார்.

No comments:

Post a Comment