இந்தியாவில் 4 இடங்களில் ரயில்வே பல்கலை அமைக்க விருப்பம்: பிரதமர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 27, 2014

இந்தியாவில் 4 இடங்களில் ரயில்வே பல்கலை அமைக்க விருப்பம்: பிரதமர்

இந்தியாவில் 4 இடங்களில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும், ரயில்வே தனியார் மயம் என்பது குறித்து எதிர்கட்சியினர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் 4 இடங்களில் ரயில்வே பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்களின் ஆசை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், "ரயில்வே தனியார் மயம் என்பது குறித்து
எதிர்கட்சியினர் தவறான பிரசாரம் செய்கின்றனர். ரயில்வே துறை மேம்பாட்டின் மூலம் இந்த நாட்டு மக்களின் மேம்பாடும் இணைந்திருக்கிறது. ரயில்வே துறையை என்னை விட யாரும் அதிகம் விரும்பி இருக்க முடியாது.
ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. ரயில்வேயில் சேவை மற்றும் ஸ்டேஷன் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் முதலீடு செய்ய சொல்லித்தான் கேட்டுள்ளோம்.
ஆனால் ரயில் தனியார் மயம் என்பது பொருள் அல்ல. நாடு முழுவதும் 4 இடங்களில் ரயில்வே பல்கலை அமைக்கப்பட வேண்டும் என இந்த அரசு விரும்புகிறது. இது விரைவில் நடக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

No comments:

Post a Comment