தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 5, 2016

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு !


மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விருதை பெற, 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க
வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாநிலத்தில், 22 பேருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களே, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தமிழகத்தில் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மார்ச், 15க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.-

No comments:

Post a Comment