தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது.அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் இடம்பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு நேற்று(22-03-16) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லண்டனில் உள்ள தன்னார்வ நிறுவனமான 'வாட்டர் எய்டு' , பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கிடைக்கப்படும் சுத்தமான குடிநீர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 5% பேருக்கு, அதாவது 7.6 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. தண்ணீர் பிரச்னையால் உண்டாகக்கூடிய வயிற்றுப்போக்கின் காரணமாக, ஆண்டுதோறும் 1.4 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்தியாவில் பாதுகாப்பட்ட குடிநீரை குடிக்கும் மக்கள், சுத்தமான குடிநீரை வியாபாரியிடமிருந்து பெற, ஒரு லிட்டர் குடிநீருக்கு 1 ரூபாய் செலவிட வேண்டியது வரும். தண்ணீர் பற்றாக்குறையை பொருத்து, சில நேரங்களில் இத்தொகை இரட்டிப்பாகும். நீர் வளங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் தான் இந்திய மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் டாப்-3ல், இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் உள்ளன. பாகிஸ்தான் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.
No comments:
Post a Comment