வங்கக் கடலில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுகள் தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்தத்
தாழ்வு நிலைகள் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு அருகே மற்றும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் உருவாகியுள்ளது.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும், மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment