பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 26, 2017

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

அனைவராலும் என்எல்சி என அழைக்கப்படும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
100 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: என்ஜினியர் - (மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிவில், மைனிங், கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்)


காலியிடங்கள்: 100


கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.300-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm


விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.01.2017

No comments:

Post a Comment