ஆதார் எண்ணை 31–ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமி‌ஷனர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 26, 2017

ஆதார் எண்ணை 31–ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமி‌ஷனர் தகவல்

அரசு மானியத்தை தொடர்ந்து பெறுவதற்காக தொழிலாளர் ஓய்வூதிய திட்ட உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆதார் சேர்க்கை முகாமில் இம்மாதம் 31–ந்தேதிக்கு முன்பு தங்களது ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் வாழ்க்கை சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் 31–ந்தேதிக்கு முன்பு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை அடுத்த மாதம் 28–ந்தேதிக்கு முன் சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்காக டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி அடுத்த மாதம் 28–ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அருகில் உள்ள பொதுவான சேவை மையதிற்கோ ஆதார் அட்டையின் நகல், வங்கி கணக்கு அட்டை, பி.பி.ஓ. எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.

டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்கள் இதுவரை பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்கள் அடுத்த மாதம் 28–ந்தேதிக்கு முன்பு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்படி பதிவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாதம் 1–ந்தேதி முதல் ஓய்வூதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது.

மேற்கண்ட தகவல் சென்னை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதன்மை கமி‌ஷனர் சலில் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment