பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 22, 2017

பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் மிகப்பெரிய எழுச்சி பெற்றது. அத்துடன் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதனால் கடந்த சில நாட்களில் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினரும் விடுமுறை என அறிவித்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழக அரசு, இன்று சில இடங்களில் ஜல்லிக்கட்டையும் நடத்தியது. நாளை சட்டமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற இருக்கிறது. இருந்தாலும் நிரந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment