பள்ளியில் மாணவர்களின் வருகையை கண்காணிக்க 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 29, 2017

பள்ளியில் மாணவர்களின் வருகையை கண்காணிக்க 'ஸ்மார்ட் கார்டு' முறை அறிமுகம்


பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்து கண்காணிப்பதற்கு தமிழக அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தப் போவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, ‘பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்மாட் கார்டு வழங்கப்படும். அதில் ஒரு சிம் கார்டு இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் மாணவர்களின் வருகையானது பதிவு செய்யப்படும். மேலும் இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

மேலும், இந்த ஸ்மாட் கார்டு திட்டம் வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வரும் என அவர் கூறினார்.


No comments:

Post a Comment