கல்லூரியில் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 22, 2018

கல்லூரியில் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லுாரியில், காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, பாரதியார் பல்கலை.யின் கீழ் இயங்குகிறது. இங்கு, பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. பதிவறை எழுத்தர் பணிக்கும் விண்ணப்பிப்பவர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர், அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டு மார்ச் 15ல், விண்ணப்பதாரரின் வயது 30 முதல், 35 க்குள் இருக்க வேண்டும். சுய விபரம், போட்டோவுடன், வரும், 23ம் தேதிக்குள், முதல்வர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர் 641 602 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment