தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன்கூடிய மழை : வானிலை மையம் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 21, 2018

தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன்கூடிய மழை : வானிலை மையம் தகவல்

உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 5 செ.மீ, கிருஷ்ணகிரி தளி, ஈரோடு கோபி செட்டிப்பாளையத்தில் தலா 4 செ.மீ, பேச்சிப்பாறை, ஈரோடு பெருந்துறை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை,கோவை மேட்டுப்பாளையம், வேலூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது கூறியுள்ளது.

No comments:

Post a Comment