TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 14, 2019

TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா?

TET தேர்விற்கு 45% மதிப்பெண் கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைக்குமா?
#பட்டதாரி_இளங்கலை_ஆசிரியர் படிப்பிற்கு SC மாணவர்கள் 40% மும் 
MBC 43 %சதவீதம் மதிப்பெண் 
பெற்றால் போதும் கல்லூரியில் #அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது . 
ஆனால்TET தேர்வு எழுத #அனைத்து_பிரிவினருக்கும் 45% என ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயித்து இருக்கிறது! 
இது #முரணாக இருக்கிறது கல்வி 
பயில அனுமதிக்க ஒரு மதிப்பெண்ணும் வேலை வாய்ப்புக்கு செல்ல ஒரு மதிப்பெண்ணும் நிர்ணயித்திருப்பது 
40%முதல் 44% வரை மதிப்பெண் 
பெற்று இளங்கலை ஆசிரியர் படிப்பு பயின்ற மாணவர்களின் #எதிர்காலத்தை பறித்துள்ளது! 
இந்த விதிமுறைக்கு #தேசிய_கல்வி_வாரியம் கொண்டுவந்த விதிமுறை தான் காரணம் 
என கூறுகிறது #தமிழ்நாடு_ஆசிரியர்தேர்வு வாரியம் 
இது #இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் #சமூகநீதி கொள்கைக்கும் எதிரான முடிவு ஆகும் 
இந்த நேரம் #தேர்தல்நேரம் 
என்பதால் அனைவரின் கவனமும் தேர்தல் மீது தான் இருக்கிறது 
இந்த அறிவிப்பு மூலம் #எண்ணற்ற மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் எதிர்காலம் வீணடிக்கப்படும் 
சூழலை #மத்திய_அரசும்_மாநில_அரசும் இணைந்தை உருவாக்கியுள்ளது 
#சமூக_செயற்பட்டாளர்களும் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி காவலர்களும் 
இந்த விசயத்தை உற்று கவனித்து 
தேர்வு எழுத முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாணவர்களின் நலனை மீட்க 
கரம் கோர்க்க வேண்டும்! 
நாம் அனைவரும் இந்த விசயத்தை மெளனமாக கடந்து செல்லாமல் 
#அனிதா போன்ற தங்கைகளை 
மீண்டும் பறி கொடுக்காமல் அவர்களை காப்பாற்ற அரசு அடக்குமுறைக்கு எதிராக போராடுவோம் 
வருமுன் காப்போம் 
மேலும் வழக்கில் இணைந்து வெற்றிபெற தொடர்புக்கு 
திரு.அன்னக்கொடி மதுரை 
செல்: 99433 10588

No comments:

Post a Comment