ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 13, 2014

ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது


பள்ளிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதாக, ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான தகவல், மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி குறித்த அறிவிப்பு, இ-மெயில் மற்றும் தபால் வழியாக கல்வித்துறை அறிவிக்கிறது.

மாநில கல்வித்துறையில் இருந்து மாவட்டம் மற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, கல்வித்துறை தரப்பில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. நடுநிலை முதல் மேல்நிலை வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியிருப்பதால், இ-மெயில் வழியாகவும், அவ்வசதி இல்லாத பள்ளிகளில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாகவும் தகவல் அறிவிக்கப்படுகிறது.ஆனால், துவக்கப்பள்ளிகளில் இ-மெயில் தகவல் பரிமாற்றத்துக்கான வசதி இல்லை. தபால் மூலமாகவோ அல்லது உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் சென்றோ, தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இதனால், ஆசிரியர் கூட்டம், மாணவர்களுக்கான போட்டி குறித்த தகவல்கள், துவக்கப்பள்ளிகளுக்கு தாமதமாக வந்தடைகிறது. குறுகிய அவகாசத்தில் மாணவர்களை போட்டிக்கு தயார்படுத்த, ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்; மாணவர்களும் திணறுகின்றனர். இதனால், வகுப்பில் ஓரிருவர் மட்டுமே, போட்டிகளில் பங்கேற்கும் நிலை உருவாகிறது. மற்ற மாணவர்கள், திறமையிருந்தும் அவகாசமின்றி, தயாராவதில் சிக்கில் ஏற்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கல்வித்துறையில் இருந்து தகவல் வந்ததும், அவற்றை பள்ளிகளுக்கு இ-மெயில் மற்றும் தபால் மூலமாக உடனடியாக அனுப்புகிறோம். முக்கியமான தகவல் எனில், மொபைல்போனில் தெரிவிக்கிறோம்,' என்றனர்.


No comments:

Post a Comment