காட்டேரிக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் துணை சபாநாயகர் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மழலைகள் ஆரம்ப கல்வியைப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கன்வாடி மைய கட்டடத்தை துணை சபாநாயகர் செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, அங்கன்வாடி மையத்தில் உள்ள மழலைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டிருந்த உணவுகளை பரிசோதித்தார். அப்போது, அங்கன்வாடி பணியாளர்கள் மையத்தின் தரை தளம் தற்போது மிகவும் சேதமடைந்துள்ளதால், மழலைகள் அவதிக்குள்ளாவதாக தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஆய்வின்போது, கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சேர்மன் சூரன், உறுப்பினர் அரிபுத்திரி, கிராம கல்விக் குழு தலைவர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment