பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வில் பள்ளிப் பார்வையின் போது ஆய்வு செய்யப்படுபவை:: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 31, 2021

பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வில் பள்ளிப் பார்வையின் போது ஆய்வு செய்யப்படுபவை::

பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெறும் மண்டல வாரியான ஆய்வில் பள்ளிப் பார்வையின் போது ஆய்வு செய்யப்படுபவை:

* பள்ளி வளாகம் தூய்மையாக வைத்திருத்தல்.
 
*குடிநீர் வசதி செய்து கொடுத்தல். 

*புத்தாக்க பயிற்சிக் கட்டகம் ஒவ்வொறு ஆசிரியரும் வைத்திருத்தல். 

*கழிவறை சுத்தமாக வைத்திருத்தல். 

*பள்ளியைச் சுற்றி தண்ணீர் தேங்கா வண்ணம் இருத்தல். 

*குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ஒவ்வொரு ஆசிரியரும் வைத்திருத்தல். 

*கற்றல் விளைவுகள் உற்றுநோக்கல் பதிவேடு வைத்திருத்தல். 

*கல்வி தொலைக்காட்சி வீடியோஸ் பார்த்து கற்றலில் பயன்படுத்த வேண்டும்.

*கற்றல் விளைவுகள் ஆசிரியர் செயல்பாடுகள் வைத்திருத்தல்.  

*பாடத்திட்டம் புத்தாக்கப்பயிற்சிக்கு வாராவாரம் எழுத வேண்டும்.

*அதில் வலுவூட்டல் .கற்றல் விளைவுகள் இருக்க வேண்டும் இரு பக்கங்களுக்கு குறையாமல் எழுத வேண்டும்.

*பள்ளிக் கட்டடம் இடிப்பு விவரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரத்தினை நகல் எடுத்து வைத்திருத்தல்.

*உதவி எண்கள் அனைத்தும் மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*I T K தன்னார்வலர்கள் விவரம்.

*பள்ளி செல்லா குழந்தைகள் விவரம்.

*மாணவர் மனசு பெட்டி மாதம் இரு முறை பெட்டியை SMC முன்னிலையில் திறந்து கடிதங்களில் குறிப்பிடப்பட்ட பொருள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிவேட்டில் குறிப்பிடுதல். 

*CSWN மாணவர்களை பள்ளியில் சேர்க்கப்பட்ட விவரம். 

*பள்ளியின் மேல் படர்ந்த மரக்கிளைகளை வெட்ட வேண்டும். 

*கையெழுத்து ஏடு .கட்டுரை ஏடு .வீட்டுப்பாடம் ஆகியவை திருத்தி தேதியுடன் கையொப்பம் இட்டு வைக்க வேண்டும். 

*சத்துணவுக் கூடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் தயாரிக்க வேண்டிய உணவு அட்டவணை முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

*EMIS இல் மாணவர்கள் .ஆசியர்கள் பதிவுகள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

*பெயர் பலகையில் கடைசியாக ஆய்வு செய்த அலுவலரின் பார்வையிட்ட தேதி குறிப்பிட வேண்டும். 

*நூலக செயல்பாடுகள் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். 

*அங்கன்வாடி மையம் விவரங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

*பள்ளிக்கு தேவைகள் என்ன என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

*SMC தீர்மானம் பதிவேடு ஆரம்ப நாள் முதல் வைத்திருக்க வேண்டும். 

*TLM பயன்பாடு இருக்க வேண்டும் அதில் chalk ஐ TLM ஆக காட்டக்கூடாது. 

*பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். 

*பெண் குழந்தைகளுக்கு வெளியில் இருந்தும் பிரச்சனைகள் வரலாம் அதையும் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் அதாவது S O P. 

*தீக்க்ஷா APP ஐ பயன்படுத்தி கற்ப்பிக்க வேண்டும். 

*நான் கற்றல் விளைவுகள் 100 சதவீதம் அடைய முயற்சிக்கிறேன் என பாடக்குறிப்பு பதிவேட்டின் முதல் பக்கத்தில் எழுத வேண்டும். 

*இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் குறித்த விவரத்தினை தெரிந்து வைத்திருத்தல். 

*மாணவர்கள் உடல் வெப்பநிலை ப் பதிவேடு பராமரித்தல் வேண்டும். 

*மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டப் பொருட்களுக்கும் உரிய பதிவேடுகள் பராமரித்தல். 

*EMIS இல் ஆசிரியர் வருகை மாணவர் வருகை உரிய நேரத்தில் பதிய வேண்டும் NET WORK சரியில்லை என காரணம் கூறக்கூடாது. 

*மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல். 

*படித்தல் திறன் எழுதுதல் திறன் மற்றும் கணித அடிப்படைத்திறன்கள் சோதித்தல். 

*TC , வழங்கப்படாமல் இருக்கக் கூடாது. 

*கல்வி ஊக்கத் தொகை பெற்று வழங்கிய பதிவேடுகள். 

*T C பெற்ற மாணவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தால் அவர்களின் பெற்றோரை சந்தித்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*வகுப்புகள் எந்தெந்த வகுப்பறைகளில் நடைபெறுகிறது என்பதை தலைமையாசிரியர் தெரிந்திருக்க வேண்டும். 

*அலமாரி அறைகளை திறந்து பார்க்கும் போது பதிவேடுகள் அடுக்கி வைத்திருக்க வேண்டும். 

*வெளியிலிருந்து பணமாகவோ அல்லது பொருளாகவோ பெற்று ஏதேனும் சிறப்பாக பள்ளிக்கு செய்திருந்தால் அதை பார்வையிட வருபவர்களிடம் தெரிவிக்கவேண்டும். 

*தலைமை ஆசிரியர் மேஜையில் மாணவர் வருகைப்பதிவேடு . ஆசிரியர் வருகைப்பதிவேடு போன்றவை இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment