மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:- - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 20, 2014

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:-

1. தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.

2. வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.

3. ஈரமான உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.

4. மழையில் நனையாதே - காய்ச்சல் வரும்.

5. மழைக் காலத்தில் குடை அல்லது கோட் எடுத்து செல் - முன்னெச்சரிக்கை.

6. பாதையின் மேல் கவனம் வைத்து நடந்து செல் - மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.

7. கழிவறையை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கை மற்றும் கால்களை நன்றாக கழுவவும் - கிருமி தொற்று ஏற்படாது.

8. காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகலாம்- டெங்கு, மலேரியாவாக இருக்கலாம்.

9. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள் - கொசுக்கள் வராமல் இருக்கும்.

10. மழைக்காலங்களில் பெற்றோரை காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும் செல்ல அறிவுறுத்தலாம்.

No comments:

Post a Comment