தமிழகம் முழுவதும் ஏப்ரல் 8ம் தேதியாகியும், மார்ச் மாத சம்பளம் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கருவூலத்தில்தான் அரசு மற்றும் ஆசிரியர்களின் ஊழியர்களின் சம்பள பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் முதல் 'இபே' முறை செயல்படுத்தப்படுகிறது. .மார்ச் மாத சம்பளத்திற்கான பட்டியல்,
உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து, கருவூலத்திற்கு அனுப்பி, ஒரு வாரமாகி விட்டது. ஆனால், 8ம் தேதி வரை சம்பளம் வழங்கப்படவில்லை. கருவூலங்களில் விசாரித்தால், எப்போது சம்பளம் வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment