மருத்துவ மேற்படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இம்மாதம் 29ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகள் என, பலவிதமான மருத்துவ மேற்படிப்புகள் உள்ளன.
மாநில ஒதுக்கீட்டின் கீழ், அரசு கல்லூரிகளில், 595 இடங்கள்; சுயநிதி கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன.
நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றோர், தர வரிசைப்படி கலந்தாய்வில் பங்கேற்றனர். மார்ச் 23ல் துவங்கிய முதற்கட்ட கலந்தாய்வில், 80 சதவீத இடங்கள் நிரம்பின. மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஏப்., 29, 30ம் தேதிகளில் நடக்கிறது.
மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், "அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. மாநில ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள், இடம்மாற வாய்ப்புள்ளது. அதன் விவரங்கள் பெற்று, 27ம் தேதி காலி இடங்கள் விவரம் வெளியிடப்படும்" என்றார்.
No comments:
Post a Comment