டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு எழுதுபொருள் மற் றும் அச்சுப்பணியில் 8 உதவி பணி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 1.11.2014 அன்று ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 432 பேர் பங்கேற்றனர்.சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 36 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத் தில் (www.tnpsc.gov.in) வெளி யிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மே 15-ம் தேதி சென்னை யில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் நடைபெறும். சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தனித்தனியே தகவல் அனுப்பப் படும்.
No comments:
Post a Comment