அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒன்றிய அளவிலான கணினி விவரப்பதிவாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு, தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணி நியமனம் செய்ய கீழக்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) கல்வி தகுதி +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 2) தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், மேற்காணும் தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு மொத்தம் 40 நிமிடங்கள் கொண்ட தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு, கணினியில் வரைபடம் வரைய தேர்வுகள் நடைபெறும்.மேற்காணும் கணினி விவரப்பதிவாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும், விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்ப மனுவுடன் மேலொப்பமிட்ட கல்வி சான்றிதழ், தட்டச்சு சான்றிதழ் மற்றும் கணினி சான்றிதழ் நகலினை இணைத்தும், இருப்பிட முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இருப்பின் மின்னஞ்சல் விவரத்தினையும் தவறாமல் குறிப்பிட்டு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் என்ற அலுவலக முகவரிக்கு 13.05.2015 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனுக்களை அனுப்ப விண்ணப்பத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment