தமிழகத்தில் மே 4-ம் தேதி கத்தரி வெயில் தொடங்குகிறது. இது மே 29-ம் தேதி வரை நீடிக்கும்.
கத்தரி தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக இருக்கும். ஆனால் இந்த முறை கோடை மழை பெய்துள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்று மேல் அடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் நேற்று கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோவை மாவட்டம் சின்னகல்லார், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment