1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதும் பள்ளி மாணவி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 30, 2015

1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதும் பள்ளி மாணவி

சிவகிரி, ஏப். 30–சிவகிரி எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவி சுகன்யா (16) இவர் பள்ளியில் படிக்கும் பாடங்கள் அனைத்தையும் கடகட வென தலைகீழாக எழுதி ஆச்சரியப்படுத்துகிறார்.மேலும் ஆயிரத்து 330 திருக்குறள்களையும் நோட்டு புத்தகம் ஒன்றில் தலைகீழாக எழுதியுள்ளார். பாடங்களை படித்தது போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தலைகீழாக எழுதி தற்போது விரைவாக எழுதும் பயிற்சி பெற்றுள்ளதாக மாணவி சுகன்யா தெரிவித்தார்.மாணவி சுகன்யாவின் திறமையை எஸ்.எஸ்.வி. போர்டு தலைவர் வக்கீல் சுப்பராயன், செயலாளர் டாக்டர், சுப்பிரமணியம், இணை செயலாளர், கார்த்திகேயன், பொருளாளர் ராஜேந்திரன், மற்றும் பள்ளியின் முதல்வர் ரமணி சேதுராமன், ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment