அடுத்த சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் கூடும் என்று தெரிகிறது. 11-ந் தேதி சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், நிதித்துறையை கவனிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணியில் நிதித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப்பின் பட்ஜெட் இறுதிசெய்யப்படும்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள், வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment