நாட்டுக்கு சேவையான பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
டெக்னிக்கல் என்ட்ரி திட்டத்தில் 90 பணியிடங்கள் தற்போது காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 12-ம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தல்
அவசியம். மாதம்தோறும் ஊதியமாக ரூ.21 ஆயிரம் கிடைக்கும்.
விண்ணப்பங்களை அனுப்ப விருப்பமுள்ளவர்கள் http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவேண்டும்.
விண்ணப்பித்தவர்களுக்கு மனவியல் சோதனை, குழு சோதனை, நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும். இவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே பணியிடங்களில் சேர முடியும்.
விண்ணப்பங்களை ஆன்-லைனில் மட்டுமே அனுப்பவேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.
No comments:
Post a Comment