இலவச கல்வி திட்டம்; கல்லூரிகளில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 21, 2016

இலவச கல்வி திட்டம்; கல்லூரிகளில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம்

ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் சேர தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஏழை மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-2011 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் 2016-17-ம் கல்வி ஆண்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இலவச கல்வி திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் http://www.unom.ac.in/ இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஜுன் மாதம் 6-ம் தேதிக்குள் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment