என்னது.. விரைவில் 2,000 ரூபாய் நோட்டின் மதிப்பும் நீக்கப்படுமா???..
இளஞ்சிவப்பு நிற ரூபாய் நோட்டுகள் எங்கே என்று இரண்டு நாட்களுக்கு அனைத்துத்தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்தக் கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். புதிய 2000 ரூபாய் நொட்டுகள் வெளிவந்த காலம் முதல் பலர் இந்த ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற்றுவிடும் என்று கூறுகின்றனர்.
அதே நேரம் சிலர் மத்திய அரசு கண்டிப்பாக இந்த ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறுகின்றனர். சரி இங்கு நாம் மத்திய அரசு ஏன் 2000 ரூபாய் நோட்டின் மதிப்பை நீக்க வேண்டும் என்ற காரணங்களை விளக்கமாகப் பார்ப்போம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முதன்மை இயக்கு அலுவலர் நீரஜ் வயாஸ் இது பற்றி நமக்குக் கூறும் போது தற்போது இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து 500 ரூபாய் நோட்டு மட்டும் தான் வருகின்றது. 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டும் மீண்டும் திரும்பி வங்கிக்கு வரும் நோட்டுக்கள் என்று தெரிவித்தார்.
500 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வெளியீடு
ஆங்கில இதழ் ஒன்றின் கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில் 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வெளியிட ரிசர் வங்கி முடிவு செய்துள்ளதாகக் கூறி இருந்தது.அதே நேரம் பண மதிப்பு நீக்கம் அறிவித்த காலம் போன்று பெரிதாக ரொக்கப்பணத் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்தியதுe
எஸ்பிஐ வங்கி ஏடிம் சீரமைப்பு
இந்தியாவில் மொத்தம் 2.2 லட்சம் ஏடிஎம் மையங்கள் இருப்பதாகவும் அதில் 58,000 ஏடிஎம் மையங்கள் எஸ்பிஐ வங்கிக்கு உறியது. 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் அளிக்க எஸ்பிஐ சில ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைப்புச் செய்து இருந்தது ஆனால் அதில் பலவற்றை இப்போது 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யும் அமைப்பாக மாற்றப்பட்டு வருகின்றது எனத் தகவல்கள் வந்துள்ளன. இதனை வைத்துப் பார்க்கும் போது 2,000 ரூபாய் நோட்டுகளை அந்த ஏடிஎம் இயந்திரங்களில் வைக்க முடியாது. எனவே இப்போதைக்கு 2,000 ரூபாய் நோட்டு ஏடிஎம் களில் வைக்க முடியாது
எஸ்பிஐ வங்கி ஏடிம் சீரமைப்பு
இந்தியாவில் மொத்தம் 2.2 லட்சம் ஏடிஎம் மையங்கள் இருப்பதாகவும் அதில் 58,000 ஏடிஎம் மையங்கள் எஸ்பிஐ வங்கிக்கு உறியது. 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் அளிக்க எஸ்பிஐ சில ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைப்புச் செய்து இருந்தது ஆனால் அதில் பலவற்றை இப்போது 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யும் அமைப்பாக மாற்றப்பட்டு வருகின்றது எனத் தகவல்கள் வந்துள்ளன. இதனை வைத்துப் பார்க்கும் போது 2,000 ரூபாய் நோட்டுகளை அந்த ஏடிஎம் இயந்திரங்களில் வைக்க முடியாது. எனவே இப்போதைக்கு 2,000 ரூபாய் நோட்டு ஏடிஎம் களில் வைக்க முடியாது
கள்ளப் பணம்
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு இருந்தாலும் ஒரு பக்கம் கள்ளப் பணம் அதிகரித்துள்ளது என்று கூறலாம். அதிகளவில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கள்ளப்பணமாகச் சிக்கியுள்ளன.
200 ரூபாய் நோட்டு
ஆர்பிஐ புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப் போகின்றது என்று என்ன தான் செய்திகள் வெளியாகி வந்தாலும் ஆர்பிஐ தரப்பு இது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தங்களது இணையதளத்தில் இது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
திரும்பப் பெறும் எண்ணம் இல்லை
அதுமட்டும் இல்லாமல் மாநிலங்கள் அவை அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ 2,000 ரூபாய் நோட்டினை திரும்பப் பெறும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
உண்மைதானா?
இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இருக்கலாம் ஆனால் அது உண்மைதானா? 2,000 ரூபாய் நோட்டுக்கு நீண்ட ஆயுள் இல்லையெனக் கூறும் விமர்சகர்களின் குரல்கள் மற்றும் அரசி நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது இது உண்மை தான் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. பொருத்து இருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment