அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 23, 2017

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது


தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் தொழிற்கல்வி மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்துவிட்டது.



இந்த நிலையில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 900 மாணவ- மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

இந்த கலந்தாய்வை தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார். இன்று நடந்த கலந்தாய்வில் 199.75 முதல் 199.50 வரையிலான கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ஆகஸ்டு 11-ந்தேதிவரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக சுமார் 1.38 லட்சம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment