10ம் வகுப்பு தேர்வுப்பணி ஆசிரியர்கள் எதிர்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 24, 2015

10ம் வகுப்பு தேர்வுப்பணி ஆசிரியர்கள் எதிர்ப்பு

திண்டுக்கல் : தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகதீஸ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் பிரான்சிஸ்பிரிட்டோ நன்றி கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சீனியாரிட்டிபடி துறை அலுவலர் பணி வழங்காததை கண்டிக்கிறோம். விடைத்தாள் திருத்தும் பணியில் சீனியாரிட்டி படி நியமிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் குடிநீர், கழிப்பறை ஏற்படுத்தி தர வேண்டும். பள்ளித்துணை ஆய்வாளர் காலியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment