கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் சிறப்பு முகாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 20, 2015

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் சிறப்பு முகாம்

நாமக்கல்லில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும்சிறப்பு முகாமை சிட்டி யூனியன் வங்கி ஆக. 21-ஆம் தேதி நடத்துகிறது.

இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் நாமக்கல் கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிட்டி யூனியன் வங்கியின் நாமக்கல் கிளை சார்பில், கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளாகவும் அல்லது நாணயங்களாகவும் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இம்முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கோல்டன் பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.  முகாமை, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தொடக்கிவைக்கிறார்.

முகாமில், 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளும் மாற்றித்தரப்படுகிறது. எனவே, இந்த சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களிடம் உள்ள கிழிந்த,  அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment