கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்வுகள் நவம்பர் 2–ந் தேதி தொடக்கம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 26, 2015

கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்வுகள் நவம்பர் 2–ந் தேதி தொடக்கம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை(தெரிவுநிலை) பாடத் திட்ட நவம்பர் 2015 தேர்வுகள் நவம்பர் 2–ந் தேதி தொடங்குவதாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் ச.பிரபாகர் அறிவித்து உள்ளார்.பட்டபடிப்பு தேர்வுகள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு
பெற்றுள்ள கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை(தெரிவுநிலை) பாடத்திட்ட நவம்பர் 2015 தேர்வுகள் நவம்பர் 2–ந் தேதி தொடங்குகின்றன.இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவுகளில் 1999–ஆம் ஆண்டு முதல் 2007–ஆம் ஆண்டு வரையில் பயின்ற நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனித் தேர்வர்களுக்கு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்திலும், கன்னியாகுமரி மாவட்ட தனித் தேர்வர்களுக்கு நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியிலும், அக்டோபர் 23–ந் தேதி முதல் நடைபெறும்.விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள், தேர்வு கட்டணத்தை வரும் 4–ந் தேதிக்குள் உரிய கட்டணத்துடனும், அதன்பின் 11–ந் தேதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட அபராதக் கட்டணத்துடனும், பவர் ஜோதி, பாரதி ஸ்டேட் வங்கி கணக்கு எண்: 32723644186 அல்லது இந்தியன் வங்கி கணக்கு எண்: 925398556–ல் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான வங்கி ரசீதையும் இணைத்து, தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி–627012’ என்ற முகவரிக்கு வரும் 16–ந் தேதிக்கு முன்பாக கிடைக்கும்படி, அனுப்ப வேண்டும்.16–ந் தேதிக்கு பின் பெறப்படு விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு பல்கலைக்கழ தேர்வாணையர் ச.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment