7ஆவது ஊதியக் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 27, 2015

7ஆவது ஊதியக் குழுவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

7ஆவது ஊதியக் குழுவின் கால அவகாசத்தை, வரும் டிசம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக ஊதியக் குழுவின் செய்தித்தொடர்பாளர் தனது சுட்டுரையில் (டுவிட்டர்) புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "7ஆவது ஊதியக் குழுவின் கால அவகாசத்தை, வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தியமைக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 7ஆவது ஊதியக் குழுவை அமைத்தது.
குழுவின் அறிக்கையை, வரும் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment