TET Article : ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்கு மனநிம்மதியை தருவது டெல்லி அறவிப்பா? தமிழக அறிவிப்பா? › - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 31, 2015

TET Article : ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்கு மனநிம்மதியை தருவது டெல்லி அறவிப்பா? தமிழக அறிவிப்பா? ›

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் :

    2013ம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குள் இறுதி விசாரணைக்காக வரும் செப்டம்பர் முதல் தேதியில் வருகிறது. ... இதையொட்டி தமிழக அமைச்சரவையின் பள்ளிக்கல்விததுறையின் மானியக்கோரிக்கையும் செப்டம்பர் 1ம் தேதி வந்துள்ளது இந்நிகழ்வு பெருத்த மாற்றத்தை நிச்சயம் தரும் ... அவ்விதமான நல்ல செய்தி எங்கிருந்து வரப்போகிறது என்று தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்...

எதிர்ப்புகளுக்கு பஞ்சமில்லாத செப்டம்பர் - 1

       ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 2014ம் ஆண்டைய காலிப்பணியிட விவரம் மற்றும் 2015ம ஆண்டைய காலிப்பணியிட விவரம் அறிய ஆவலோடு உள்ளனர்... மேலும் சில ஆசிரியர் அமைப்புகள் இது பற்றி விவாதிக்க கம்யூனிஸ்ட் மற்றும் புதியதமிழகம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே கோரிக்கையும் வைத்துள்ளனர்... இரண்டாண்டுகள் பணியிடம் மற்றும் தற்போதைய ஓரளவு பணிநிரவல் குறைந்ததன் காரணமாக குறைந்தது 4000 காலிப்பணியிடம் இருக்கும் என செய்தி வருகிறது...

யாரை வைத்து நிரப்ப திட்டமோ?

        ஏற்கனவே 2013ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று தேவைக்ககு அதிகமான ஆசிரியர்கள் வேலைக்காக காத்துள்ளனர் மற்றும்  நேரகாலம் மற்றும் உச்சநீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றையும் அரசு மனதில் கொண்டு அறிவிப்பு வெளியிட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் வயிற்றில் பாலை வார்க்க அந்த அறிவிப்புக்காக ஏங்கும் ஆசிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யயும்?????

Article By

P.Rajalingam Puliangudi

No comments:

Post a Comment