தொடக்க கல்வித்துறையின் கீழ், மாணவர்களுக்கு சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆசிரியர்களுக்கு, பூஜ்ய கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செய்துள்ளது. கருத்தாளர்களுக்கான சிறப்பு பயிற்சிகள், கடந்த மாதம் சென்னையில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், கழிவுப் பொருட்களை தரம் பிரித்தல், சேகரித்தல், கொண்டு செல்லுதல், தேவையற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்தல் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது. ஆசிரியர்களின் பயிற்சிகளை தொடர்ந்து, அந்தந்த பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அக்., 5ம் தேதி இப்பயிற்சிகள் ஒன்றிய அளவில் நடக்கவுள்ளது.
No comments:
Post a Comment