குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி அக். 11ல் துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 30, 2015

குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி அக். 11ல் துவக்கம்

விருதுநகர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விருதுநகரில் அக்.,11ல் துவங்குகிறது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் 2006ல் இருந்து தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை 1,800 பேர் தேர்ச்சி பெற்று தமிழக அரசில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தேர்வாணையம் அறிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அக்.,11ல் துவங்க உள்ளது.

இதற்கான சேர்க்கை அக்.,1 முதல் 6 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். அக்.,6க்குப்பின் சேர்க்கை கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment