தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி; ஆசிரியர்களுக்கு தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 21, 2016

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி; ஆசிரியர்களுக்கு தடை

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இதில், ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியாளர்களாக நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிக்கின்றனர். இப்பணி பிப்ரவரி, 5ம் தேதி வரை நடைபெறும். மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்ச்சி விகிதம் சரியாமல் இருக்க, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, இதர பணிகளை வழங்கக்கூடாது என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதையடுத்து சேலம் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ஞானகவுரி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, எக்காரணம் கொண்டும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் நடத்தும் ஆசிரியர்களை அனுப்பக்கூடாது. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், இதர வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளவும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment