திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், மதுரை நாணயவியல் கழகம் மற்றும் அரசு அருங்காட்சியகம் ஆகி யவை சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அரசின் அருங்காட்சியகத்தில் உலக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
அணா, காலணா, ஓட்டை போட்ட ஒரு பைசா, அரையணா உள்ளிட்ட செம்பு, வெள்ளி, நிக்கல், பித்தளை நாணயங்கள் ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் இருக்கும் 210 நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில் பிள்ளையார் படம் போட்ட ரூபாய் நோட்டு, ‘இன்சியல்’ குறியீடால் அடையாளப்படுத்தப்படும் ஆப்ரிக்கா நாடுகளின் ரூபாய் நோட்டுகள், அமெரிக்கா வெளி யிட்ட மனிதர்களே வசிக்காத அண்டார்டிகாவின் ரூபாய் நோட்டு, ‘ஹஜ்’ பயணத்துக்காக சவுதி அரேபியாவில் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய பாகிஸ்தான் வெளியிட்ட நோட்டு, உலகிலேயே மிகப் பெரிய நாடான ரஷ்யாவின் ரூபாய் நோட்டு, சைனாவின் மிகச்சிறிய ரூபாய் நோட்டு, இரண்டாம் உலகப் போர் நினைவாக ஜப்பான் பிரத்யேகமாக தயாரித்து வெளியிட்ட நோட்டுகள் கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினரை வெகுவாகக் கவர்ந்தன.
இதுகுறித்து திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறியதாவது: கண்காட்சியில் 18-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை பயன்பாட்டில் உள்ள உலக நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி நாளை (இன்று) வரை 2 நாள் நடக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, அந்நாட்டின் ரூபாய் நோட்டுகளை வைத்து மதிப்பிடலாம். எவ்வள வுக்கு எவ்வளவு ரூபாய் நோட்டு கள் குறைந்த மதிப்பீட்டில் அச்சிடப்படுகிறதோ, அதற்கேற்ப அந்நாட்டின் பொருளாதாரம் உயர்வாக இருக்கும். அதிகமான மதிப்பீட்டில் அச்சிடப்பட்டால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும். உதாரணமாக, ஜிம் பாம்வே நாடு, நூறு டிரில்லியன் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
உலகிலேயே இந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து இருப்பதை இந்த ரூபாய் நோட்டு மதிப்பு காட்டுகிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக 100 டாலர் நோட்டுகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவின் நாணய வரலாற்றை சுதந்திரத்துக்கு முன், சுதந்திரத்துக்கு பின் என பிரிக்கலாம்.
சுதந்திரத்துக்கு முன் மன்னர்கள், சமஸ்தானங்கள் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களில் நாணயங்களை வெளியிட்டனர். உலோக நாணயங்களை செய்வதற்கு அதிக செலவானதால், சுதந்திரத் துக்குப் பின் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர். பயன்பாட்டில் இருக்கிற நாணயங்களைச் சேகரிப் பது எளிது. பழங்கால நாண யங்களை சேகரிப்பதற்கு அதிக செலவீனம் ஏற்படும். நாண யங்களை சேகரிப்போரை ‘பொழுதுபோக்கின் அரசன்’ என்பார்கள்.
No comments:
Post a Comment