நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயது
வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரே
விதமான பாடத்திட்டத்தை அமல்படுத்த
உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்
பொதுநல மனு தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.
ஏற்றத் தாழ்வுகள்:
சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்
உபாத்யாயா என்பவர் தாக்கல்
செய்துள்ள பொது நல மனு
விவரம்: நம் நாட்டில் தற்போது நடைமுறையில்
உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,
பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள்
உள்ளன. குழந்தைகளின்,
சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்ப
கல்வியும் மாறுபடுகிறது.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும்
ஜனநாயக நாடு என கூறுவதற்கு,
இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறை
நிச்சயம் உதவாது.சமூகம்,
பொருளாதாரம், மதம்,
கலாசாரம் என, எந்தவகையிலும்,
குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாது
என,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில்
கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் கல்வி உரிமை
சட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாக
கல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி,
ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு, நாடு முழுவதும்,
ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடிய
கல்வியை வழங்க வேண்டும் என்பதையும்
வலியுறுத்துகிறது.
சமூக, பொருளாதார பாகுபாடு
நீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமான
பாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும்
அமல்படுத்த வேண்டும். பின்லாந்து,
டென்மார்க், நியூசிலாந்து, நார்வே,
கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,
ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்ற
நாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறை
தான் அமலில் உள்ளது.
உத்தரவிட வேண்டும்:
அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரே
மாதிரியானபாடத்திட்டத்தை
அமல்படுத்தும்படி, மத்திய,மாநில
அரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு
அவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்கால
விடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும்
இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும்.
அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்படலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, January 7, 2016
New
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment