நம் தலைமுறை முன் உள்ள கேள்விகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 4, 2016

நம் தலைமுறை முன் உள்ள கேள்விகள்

பாடங்களைப் படிப்பதில் பாதிப்புகள்

கல்விபெறும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரவுள்ள திருத்தங்கள் அடுத்து கவனிக்கத் தக்கவை. இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு நன்மைகளும் தீமைகளும் கலந்தே ஏற்பட்டுள்ளன. பள்ளிக்கூடத்துக்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அவற்றில் ஆண், பெண் விகிதமும் பாராட்டத் தக்க வகையில் உயர்ந்துகொண்டே வருகின்றன. ஆனால் பாடங்களை வாய்விட்டுப் படிப்பது, சொல்வதைக் கேட்டு பிழையில்லாமல் எழுதுவது, கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்குகளைப் போடுவது போன்றவற்றில் மாணவர்கள் அவர்களுடைய வயதுக்கும் அவர்கள் படிக்கும் வகுப்புக்கும் ஏற்ற திறனைப் பெறாமல் பின்தங்கியிருக்கிறார்கள்.

முதலாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரையிலான தொடக்கக் கல்விப் பருவத்தில் மாணவர்கள் சேர்வது தேசிய அளவில் 95% ஆக உயர்ந்திருக்கிறது. 2013-14-ம் ஆண்டில் மாணவியர்கள் சேர்வது 100.6% ஆகவே உயர்ந்திருக்கிறது. பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளியில் சேர்வது 102.8% ஆகவே உயர்ந்திருக்கிறது. நலிவுற்ற பிரிவினர் பள்ளிகளில் சேர்வது இப்படி அதிகரித்திருப்பதற்குக் காரணம் கல்வி பெறும் உரிமைச் சட்டம்தான் என்பதால் நாம் அதைக் கொண்டாடுவதிலும் நியாயம் உண்டு. ஆனால் இச்சட்டத்தின் இன்னொரு முக்கிய அம்சம், ஆண்டு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தோல்வி அடைய வைக்காமல், அடுத்த வகுப்புக்கு அனுமதிப்பது என்பது. இதனால் மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடை நிற்காமல் கற்கிறார்கள் என்றாலும் அவர்களுடைய வாசிப்புத்திறன் கவலைகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.

எட்டாவது வகுப்பு வரை மாணவர்களை அதே வகுப்பில் மீண்டும் படிக்கச் சொல்லாமல் அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடுவது என்ற கொள்கையை வகுத்தபோதே, மாணவர்களின் கல்வித் திறனை அனைத்து அம்சங்களிலும் தொடர்ந்து மதிப்பிட்டு வர வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டுவந்தனர். திறன் குறைவான மாணவர்களை மேம்படுத்த ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைகளும் கூட வரையறுக்கப்பட்டன. அவை சரியாக அமல்படுத்தப்படவில்லை. எனவே இந்த நிலைமை.

ஆண்டுதோறும் தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் வடிகட்டுவது என்ற முடிவை மாநில அரசுகளும் மத்திய அரசும் அடுத்து எடுத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்த உடனேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போக ஆரம்பித்துவிடுவார்கள். பிற்காலத்தில் அந்த மாணவர்கள் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பையும் இழந்துவிடுவார்கள்.

நன்றி : தி இந்து ஆங்கிலம்.

No comments:

Post a Comment