இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் (DIET) - ன் புதிய முயற்சி.
உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடக்கப் பள்ளிகளில் கற்றல் , கற்பித்தல் நிகழ்வை மேம்படுத்த
' சிந்தனை ' தூண்டல் எனும் புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆர்வமும், ஊக்கமும், புதியன படைத்தலில் விருப்பமும் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் இம்முறையை செயல்படுத்த தங்கள் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் ஒப்புதல் பெற்று இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை அணுகவும்.
இத்திட்டத்தில் ஒரு சரகத்திற்கு 2 பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
இந்த திட்டம் முழுமையும், தன்னார்வ மிக்க ஆசிரியர்களை கொண்டு பள்ளி சுய செயல் மேம்பாட்டுத் திட்டமாக செயல்படும்.
இது சார்ந்த தகவல்களை பெற
அணுக வேண்டிய தொடர்பாளர் :-
திரு.மா.சுரேஷ்,
91 50 44 O955
இப்படிக்கு,
DIET ஆலமரத்தின்
பேர்ணாம்பட்டு விழுது
இ.ஹரிஹரன்.
பேரணாம்பட்டு .
No comments:
Post a Comment