தேர்தல் பணியில் ஆசிரிய சமூகங்களின் வேதனை - பாகம் 1 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

தேர்தல் பணியில் ஆசிரிய சமூகங்களின் வேதனை - பாகம் 1

கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரே ஒரு நாளைக்கு 20 நிமிசம் வரிசையில் நின்று வாக்களித்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பிய ஊடகங்களே,....

திங்கள் கிழமை தேர்தல் பணிக்கு ஞாயிற்றுக் கிழமையே கிளம்பி தான் தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடிக்குச் சென்று, சரியா சாப்பிடாம, அன்னைக்கு இரவு சரியா தூங்காம, வீட்டுல உள்ள குழந்தைகள் சாப்பிட்டாங்களா ன்னு கவலையோட சரியாக்கூட தூங்காம

மறுநாள் தேர்தல் நாள் அன்னைக்கு காலைல 4 மணி க்கே எழுந்திருச்சி குளிச்சி , 7 மணி க்கு தேர்தல் பணியை ஆரம்பிச்சு, அவசரம் அவசரமா சாப்பிட்டு, இடைவிடாமா தேர்தல் பணியை செஞ்சிட்டு, எதுவும் அசம்பாவிதம் நடந்துடாம இருக்கணும் கடவுளேன்னு சாமிய கும்பிட்டுகிட்டு, கணவர்கிட்ட இருந்து வரும் போனைக்கூட எடுத்து பேச முடியாம ,மதியமும் அவசரம், அவசரமா சாப்பிட்டு ஒரு வழியா 6 மணி க்கு தேர்தல் பணியை முடிச்சி , இயற்கை கடன்களைக்கூட சரியா போக முடியாம அவதிப்பட்டு, பெட்டிய நள்ளிரவு எடுக்குற வரைக்கும் காத்திருந்து நடு இரவில் பஸ்ஸோ, காரோ கிடைக்குறத புடிச்சு ஊர் வந்து சேர்ந்து சரியாக்கூட தூங்காம தனது கடமையை சரியா நிறைவேற்றிய திருப்தியோட இன்னைக்கும் ஆபிசுக்கு வந்திருக்கிற எங்களின் அரசு அலுவலர் சகோதரிகளை எல்லாம் ஊடகங்களின் கண்களுக்குத் தெரியாதா?

ஆசிரியர்: சேகர்

இரவு வாக்கு பெட்டி எடுத்து விட்டு ஊர் திரும்ப எல்லோரிடமும் பணம் இருந்தது.ஆனால் சாப்பாடு வாங்க உணவுக்கூடங்கள் தான் இல்லை. பட்டினியாக நாங்கள் 15 பேர் இரவு 1 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

[அடுத்த முறை இந்த அவலம் யாருக்கும் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவும்.

ஆசிரியர் : சுரேஷ்

[5/17, 10:29 PM] W Viswanath
Chennai: FOOD not availed
Bus not availed
Urine pass time not availed
Unwanted forms given

Postal vote not issue still today

Chennai: VISWANATH
Chennai
But 44 Anicutt

Chennai Native

/உடனடி கவனம்/    

        ஆசிரியர்களிடம் 100% ரிசல்ட் கேட்கும் மாவட்ட ஆட்சியர்கள், ஆசிரியர் மாணவன் பள்ளிக்கே வரவில்லை என்று காரணம் கூறும்போது, நீங்கதான் வீட்டுக்கு போய் அவன அழைத்து வந்து படிக்க வைக்க வேண்டும் கூறுவீர்களே வேறு எந்த காரணம் கூறினாலும் காது குடுத்து கேட்க மாட்டீர்களே. இப்ப 100 %   வாக்குபதிவு தமிழ்நாட்டில் நடந்துவிட்டதா? என்ன காரணம் கூற போகிறீர்? உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?                                                அதே தொகுதியில் தேர்தல் பணி வழங்கினால் தவறு செய்வோம் நினைக்கிறீர்.  ஒரு கட்சிக்கு Favour செய்ய நினைத்தால் 234 தொகுதிகளிலும்  செய்யலாம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை.                                                 தேவையில்லாமல் 92 கவரு, அரக்கு சீலு Nil Report. அதை எடுக்க இரவு 1 மணிக்கு வருவது நடைமுறைகளை எளிமைபடுத்துங்கய்யா தெரியவில்லையென்றால் ஆசிரியர்களை கேளுங்கள். வருங்கால சமுதாயத்தை படைப்பவர்கள். உங்களை உருவாக்கியவர்களும் ஆசிரியர்களே.                                      பெட்டி எடுத்தவுடன் ஆசிரியைகள் வீடுவந்து சேர படும்பாடு ரோட்டில் நின்று பாருங்கள். விடிய விடிய பஸ் இல்லாமல் ரோடு முழுக்க நிற்பதை.                                                 இந்த பெட்டியை எலக்க்ஷன் முடிந்தவுடன் நாங்களே கொண்டு Poll Counting Place ல ஒப்படைக்க தெரியாதா? திருந்துங்கய்யா!! முட்டாளாகா இருப்பதால் பாதிப்பது மற்றவர்கள்தான் என்பதை உணருங்கள்

Sri Kathan

3 comments:

  1. 1. FOOD not availed night
    2. Bus not availed return
    3. Urine pass time not availed
    4. Unwanted forms given (finally final party informed)
    5. Postal vote not issued

    ReplyDelete
  2. 1. FOOD not availed night
    2. Bus not availed return
    3. Urine pass time not availed
    4. Unwanted forms given (finally final party informed)
    5. Postal vote not issued

    ReplyDelete
  3. FOOD not availed
    Bus not availed
    Urine pass time not availed
    Unwanted forms given
    Postal vote not issed

    ReplyDelete