கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் மே, 2ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுவதாக, கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.லிட்., பி.காம்., பி.பி.ஏ., ஆகிய, இளங்கலை பாட பிரிவுகளும், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியில் ஆகிய, இளம் அறிவியல் பாட பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த பாட பிரிவுகளுக்கான, 2016-17ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே, 2ம் தேதி முதல், கல்லூரி வேலை நாட்களில் காலை, 10 மணி முதல் மாலை, 4 மணி வரை அலுவலகத்தில் விற்பனை செய்யப்படும். ஒரு விண்ணப்பம், 27 ரூபாய்.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஜாதி சான்றை முன்னிலைப்படுத்தி, ஜாதி சான்று நகலுடன், முகவரியுடன் கூடிய விண்ணப்பத்தை இணைத்து, இலவசமாக விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment