கல்வி உதவி பெறகாலக்கெடு நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 27, 2016

கல்வி உதவி பெறகாலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவி வேண்டி, ஆன்-லைன்&' மூலம் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில், 2016-17ம் ஆண்டுக்கான கல்வி உதவி கேட்டு விண்ணப்பிக்க, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர், புதிய பதிவு மற்றும் விண்ணப்ப புதுப்பிப்பு செய்ய, www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில், வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் நலன்கருதி, வரும் செப்., 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று பயனடையலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment