தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவியேற்றார்.
செவ்வாய்க்கிழமை மாலை 4.35 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், ஆளுநர் கே.ரோசய்யா, புதிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணங்களை செய்து வைத்தார். தொடர்ந்து, ஆளுநர், முதல்வருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக, முதல்வரின் பரிந்துரைப்படி தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய அமைச்சராக ஆவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டார். அவருக்கு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.
ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளத்துறையை ஒதுக்கப்பட்டது. பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறையை கவனித்து வந்த பி.பெஞ்சமினுக்கு ஊரகத் தொழில் துறை ஒதுக்கப்பட்டது.
No comments:
Post a Comment