தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, பொறுப்பு ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக ஆளுநராக ரோசய்ய பதவியேற்றுக்கொண்டார். அதையடுத்து, ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பொறுப்பை வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.இதையடுத்து, தமிழகத்துக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம்.பிரதமர் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவரைத் தான், மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் அறிவிப்பார். அந்த வகையில் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் தமிழக ஆளுநர் பதவிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Wednesday, August 31, 2016
New
தமிழக ஆளுனர் மாற்றம்...
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் !
Older Article
ஏ.டி.எம். மெஷின்களில் மொபைல் எண் பதிவிடும் வசதி !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment