NEET தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - உச்சநீதிமன்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 5, 2017

NEET தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகவேல் என்பவர், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு கடினமாக இருந்தது., எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள நடைமுறை குறித்து விழிப்புணர்வு நமக்கு அவசியம் எனக்கூறியுள்ளது. நோட்டீஸ்: இதனிடையே, நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment