நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 8, 2021

நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித்தொலைக்காட்சியின் கால அட்டவணை குறித்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களிடமும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வித்துறை அலுவலர்களும், தலைமையாசியர்களும், ஆசிரியர்களும் விழிப்புணர்வு செய்தும், மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி பார்ப்பதை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். 

இந்நிலையில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்  ப.சண்முகநாதன் அவர்கள்  இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, பாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, மருதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளை பார்வையிட்டு ஆசிரியர்கள் வருகை, புதிய மாணவர்கள் சேர்க்கை, புதியதாக சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதா? கல்வித்தொலைக்காட்சி பயன்பாடு, பள்ளி வளாகத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியினை சேர்ந்த மாணவர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சிக்கான கால அட்டவணை துண்டு பிரசுரங்களை வழங்கி கல்வித்தொலைக்காட்சியினை கால அட்டவணைப்படி பார்க்க அறிவுரைகள் வழங்கினார். 

மேலும் மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த நூறு நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வித்தொலைக்காட்சிக்கான கால அட்டவணை துண்டு பிரசுரங்களை வழங்கி கால அட்டவணைப்படி அவர்களது குழந்தைகளை  கல்வித்தொலைக்காட்சி பார்க்க தூண்டு கோலாக இருந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment