பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 3, 2015

பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 
       «தேர்வு பணியில் நல்ல அனுபவமும், நேர்மையும் வாய்ந்த துடிப்பான குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும்படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.  
             முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் பறக்கும்படை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஒரே தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து பார்வையிடுவதை தவிர்த்து வெவ்வேறு தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து பார்வையிட ஏதுவாக முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கும் தேர்வு மையங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒரு நிலையான பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேறக்கும்படையினர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவரை கையும் களவுமாக பிடிக்கும்போது தேர்வரிடம் இருந்து கைப்பற்றிய விடைத்தாள், ஏனைய ஆவணங்களில் சம்பந்தப்பட்ட தேர்வராலேயே அவரது பதிவு எண்ணை குறிப்பிடச்செய்து அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையை எழுதி முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பறக்கும்படையினர் முதலில் செல்லும் மையத்தில் வினாத்தாள் கட்டு பிரிக்கும்போதும், கடைசியாக செல்லும் மையத்தில் விடைத்தாள் கட்டு கட்டும்போதும் உடனிருக்க வேண்டும். பேறக்கும்படையினர் தேர்வு மையங்களில் தேர்வர்கள் அச்சமுறும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. தேர்வர்களின் மனநிலை, உடல் நிலை, தேர்வு நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
சேந்தேகத்திற்குரிய தேர்வர்களை மட்டும் சோதித்தால் போதும். அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்ற வேண்டும்.பேறக்கும்படையினர் தேர்வு அறைகள் மட்டுமின்றி அறையின் வெளிப்பகுதி, கழிப்பறை, தளப்பகுதிகளை ஆய்வு செய்து முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment