கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், அரசுத் துறை பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான துறைத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவு நேற்று, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, கல்வித்துறை உதவி ஆய்வாளர், மதிப்பீட்டு மற்றும் ஆய்வு, அறநிலையத் துறை, பஞ்சாயத்து மேம்பாடு மற்றும் வருவாய் ஆகிய துறைகளுக்கான, தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment